திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய அ.தி.மு.க. பிரமுகர் கைது…!!
அயனாவரம், ராமநாதன் தெருவை சேர்ந்தவர் விஜய மாலா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் மனு அளித்தார்.
அதில், ‘‘அயனாவரத்தில் வசித்து வரும் அ.தி.மு.க. பிரமுகர் சரவணன், என்னை திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழகினர்.
இதில் நான் கர்ப்பம் அடைந்தேன். இதையடுத்து உடனே என்னை திருமண் செய்யுமாறு சரவணனிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்து 7 மாத கர்ப்பத்தை கலைக்குமாறு கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்து இருந்தேன்.
இது குறித்து விசாரணை நடத்த அயனாவரம் அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் பூங்கோதை. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது சரவணன், திருமணம் செய்தாக ஏமாற்றி விஜயமாலாவை கர்ப்பமாக்கியது தெரிந்தது. இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவர் ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating