மின்னல் வேகத்தில் சென்ற கார்..! தூக்கி வீசப்பட்ட வாலிபர் பதற வைக்கும் வீடியோ..!!

Read Time:2 Minute, 36 Second

accident_death_man_002.w540டெல்லியில் உள்ள ஜனாக்புரி பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மின்னல் வேகத்தில் கார் மோதும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

மேற்கு டெல்லியின் ஜானக்புரி பகுதியை சேர்ந்த ரிஷாப் (வயது 21) என்ற இளைஞர் நேற்று அதிகாலை இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனது தந்தையின் ஹோண்டா சிட்டி காரில் வீட்டிற்கு திரும்பினார்.

அளவுக்கதிமாக மதுபோதையில் இருந்த ரிஷாப் காரை மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டி வந்துள்ளார். அப்போது திடீரென தாறுமாறாக கார் சென்றதில் சாலையில் நடைபயிற்சிக்காக வந்த கமெஷ்வர் பிரசாத் என்ற அரசு ஊழியர் மீது கார் பயங்கர வேகத்தில் மோதியது. இதில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்ட பிரசாத் பலியானார்.

அப்போதும் காரை நிறுத்தாமல் தொடர்ந்து சென்ற ரிஷாப், சந்தோஷ்(40) என்ற மற்றொருவர் மீது மோதினார். அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். இரு விபத்தை ஏற்படுத்திய பிறகும் காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக தவறான பாதையில் காரை ரிஷாப் ஓட்டிச்சென்றார்.

கார் தாறுமாறாக வருவதை கவனித்த அஷ்வானி ஆனந்த் என்ற 67 வயது முதியவர் ஓட முயற்சித்தார். ஆனாலும், கார் அவர் மீதும் பயங்கரமாக மோதியது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

காவல்துறையின் காரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் கார் நிற்காமல் தொடர்ந்து வேகமாக சென்றதையடுத்து காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அப்போது, ரிஷாப் போதையில் இருந்தது தெரியவந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடற்கரையில் பெண்கள் போட்ட ஆட்டம்… இன்டர்நெட்டுக்கே கண்ணை கட்ட வைத்த வீடியோ…!!
Next post வெந்நீர் குடிப்பதால்…கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்..!!