வவுனியாவில் காணாமல் போன 17 வயது மாணவி மீட்பு..!!

Read Time:1 Minute, 36 Second

timthumbகடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச் சேர்ந்த 17 வயது மாணவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.

ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவி தனது தையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவிற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாக கடந்த சனிக்கழமை சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் அன்றைய தினமே நெடுங்கேணி பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் குறித்த மாணவி வவுனியா, சுந்தரபுரம் பேரூந்தில் பயணித்த போது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டதுடன் நெடுங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளை மேற்கொண்டுள்ள நெடுங்கேணி பொலிசார் தற்போது மாணவியை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவில்பட்டியில் ஒரே நாளில் 3 வீடுகளில் கைவரிசை: நகை-பணம் கிடைக்காததால் வீட்டிற்கு தீவைத்த கொள்ளையர்கள்…!!
Next post கொழும்பில் கழிவகற்ற 80 இலட்சம் ரூபா…!!