கேகாலை – அரநாயக்க மண்சரிவில் சிக்கிய மூவரது சடலங்கள் மீட்பு…!!
Read Time:1 Minute, 18 Second
கேகாலை – அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த மேலும் மூவரது சடலங்கள் நேற்று புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அரநாயக்க மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்வடைந்துள்ளது.
அரநாயக்கவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட மண்சரிவில் 25 பேர் உயிரிழந்திருந்ததோடு நூற்றுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் உட்பட மீட்பு அதிகாரிகள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட அதேவேளை மீட்பு நடவடிக்கை கடந்த மாத இறுதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரதேச மக்களின் தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் மேலும் மூவரது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரநாயக்க பிரதேச செயலாளர் வைசால் தெரிவித்துள்ளார்.
Average Rating