கதிர்காமம்:விபத்தில் 17 வயது யுவதி பலி – ஐவர் படுகாயம்..!!

Read Time:1 Minute, 49 Second

timthumb (3)கதிர்காமத்தில் இருந்து திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற வேன் ஒன்று ஜூல்பல்லம பகுதியில் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 வயது யுவதி ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (15) காலை சுமார் 10 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வீதி ஓரத்தில் நடந்து சென்ற பெண்ணின் மீது குறித்த வேன் மோதியதால் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்ததுடன், ஓய்வு எடுப்பதற்காக அருகில் அமர்ந்திருந்த 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்களும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜூல்பல்லம பிரதேசத்தை சேர்ந்த குருவிட்ட கே.ஜயந்திமகென்சிக்கா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை செவனப்பிட்டிய பகுதிக்கு யாத்திரைக்குச் சென்ற வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் படுகாயமடைந்தவர்களை சிகிச்சை பெறுவதற்காக திஸ்ஸமஹாராம வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெந்நீர் குடிப்பதால்…கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்..!!
Next post குழந்தைக்கு எமனாக மாறிய தாய்ப்பால்…!!