பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேர் கைது..!!
Read Time:1 Minute, 13 Second
சட்ட விரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் 10 பேரும் செல்லுபடியான விசா இன்றி நாட்டில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இவர்களுக்கு உதவிய வழங்கியிருந்த இலங்கை பிரஜைகள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 13 பேரையும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை(16) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating