ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடித்து 8 பேர் பலி; 16 பேர் காயம்

Read Time:1 Minute, 27 Second

Afganisthan.Flag1.jpgஆப்கானிஸ்தானின் கிழக்குப்பகுதியில் உள்ள ஜலாலாபாத் நகரில் மக்கள் கூடியிருந்த மசூதிக்கு வெளியே காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் திங்கள்கிழமை கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர். கடந்த 19-ம் தேதி இறந்த முன்னாள் முஜாகிதீன் கமாண்டருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் இந்த மசூதியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள வந்த மாகாண கவர்னர் மற்றும் மூத்த அதிகாரிகளை குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், இத்தாக்குதலை தலிபான் படையினர் நடத்தியிருக்கலாம் எனவும் மாகாண போலீஸ் தலைவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “மசூதிக்குள் போலீஸôர் செல்வதற்கு வைத்திருந்த காரில் குண்டு வைக்கப்பட்டிருந்தது’ என்றார். இக் குண்டுவெடிப்பில், கவர்னருக்கு பாதுகாப்பு அளிக்க வந்த வாகனங்கள் சேதமடைந்ததாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இஸ்ரேலுக்கு எதிராக சிரியாவும் போரில் குதிக்கிறது
Next post இராக்கில் ராணுவத்தினர்போல உடையணிந்து 26 பேர் கடத்தல்