பாகிஸ்தானில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..!!
பாகிஸ்தானில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலன் மீது ஒரு பெண் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் முல்தான் பகுதியை சேர்ந்த பெண் மொமில்மாய். இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார்.
இந்த நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சதாகத் அலி என்ற 25 வயது வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. சதாகத் அலிக்கு திருமணமாகி மனைவி உடன் இருக்கிறார்.
இதற்கிடையே, தன்னை 2-வது திருமணம் செய்து கொள்ளும்படி சதாகத் அலியிடம் மொமில்மாய் வலியுறுத்தினார். அதற்கு அலி மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மொமில்மாய், சதாகத் அலி மீது ஆசிட் (திராவகம்) வீசினார். இதனால் அவர் உடல் முழுவதும் வெந்தது.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மொமில்மாயை கைது செய்தனர். பாகிஸ்தானில் ஆண் மீது பெண்கள் ‘ஆசிட்’ வீசி தாக்குவது மிகவும் அபூர்வமாகும். எனவே இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating