ராஜஸ்தானில்ஏ .டி.எம். காவலாளி அடித்துக் கொல்லப்படும் காட்சி..!!(வீடியோ )
ராஜஸ்தானில் ஏ.டி.எம். காவலாளி கொடூரமான முறையில் திருடர்களால் அடித்துக் கொல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானில் ஏ.டி.எம். காவலாளி கொடூரமான முறையில் திருடர்களால் அடித்துக் கொல்லப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஷிதாவாவில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் காவலாளியாக பணியாற்றுபவர் இரவில் ஏ.டி.எம். அறைக்குள் தூங்கிஉள்ளார். அப்போது திருடர்கள் அந்த ஏ.டி.எம்.-ஐ கொள்ளையடிக்க உள்ளே வந்துள்ளனர். உள்ளே வந்தவர்களில் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை கட்டையினால் கொடூரமான முறையில் அடித்து உள்ளான். இதில் காவலாளி தூக்கத்திலே உயிரிழக்கிறார். இச்சம்பவம் தொடர்பான கொடூரமான வீடியோ காட்சிகள் இணையங்களில் பரவி வருகிறது. பின்னர் திருடர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி உள்ளனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். வீடியோவில் பதிவாகியுள்ள இளைஞர்கள் தங்களுடைய முகத்தை துணியால் மூடிஉள்ளனர். இந்த துணிகர சம்பவம்தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
ரத்தத்தை உரைய வைக்கும் அந்த கொலைவெறி தாக்குதல் வீடியோ..
Average Rating