திண்டிவனம் அருகே சாப்பாட்டில் விஷம் கலந்து தி.மு.க. பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை..!!

Read Time:5 Minute, 2 Second

201606171017199005_DMK-Member-family-suicide-near-Tindivanam-police_SECVPFதிண்டிவனம் அருகே சாப்பாட்டில் விஷம் கலந்து தி.மு.க. பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட பொன்குமார் குடும்பத்தினரை படத்தில் காணலாம்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சர்க்கார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பொன்குமார் (வயது45) தி.மு.க. பிரமுகர்.

புறங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர். தற்போது அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சுமதி(40). இவர்களுக்கு தீனா(25) என்ற மகனும், சண்முகபிரியா(16) என்ற மகளும் இருந்தனர்.

தீனா சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தினமும் அவர் திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று வருவார். சண்முகப்பிரியா பிளஸ்-1 படித்து முடித்துள்ளார்.

நேற்று வழக்கம் போல் தீனா சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார். இரவு 11 மணிக்கு அவர் சென்னையிலிருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.

தீனா வந்தவுடன் வீட்டில் உள்ள 4 பேரும் சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. வாயில் இருந்து நுரை தள்ளியது. சண்முகபிரியாவும், தீனாவும், கதவை திறந்து கொண்டு வெளியே வந்து மயங்கி விழுந்தனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை ஆட்டோவில் ஏற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொன்குமாரும், சுமதியும் மயங்கி கிடந்தனர்.

உடனடியாக அவர்களையும் 108 ஆம்புலன்சில் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி பொன்குமார், சுமதி, சண்முகப்பிரியா ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

பின்னர் தீனாவை மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு வேனில் அனுப்பினர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திண்டிவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பொன்குமார் குடும்பத்தினர் சாப்பாட்டில் விஷம் கலந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

பொன்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதற்கு கடன் தொல்லை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரித்தனர்.

அப்போது கடன் தொல்லை இருப்பதாக தெரியவில்லை. பொன் குமாரின் மற்றொரு மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு பொன்குமாரின் உறவினர்களே திருமணம் செய்து வைத்தனர்.

இதனால் உறவினர்களிடம் பொன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பேசாமல் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

விசாரணைக்கு பின்னர் பொன்குமார் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். கடிதம், டைரி எதுவும் சிக்கவில்லை. எனவே பொன்குமார் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது மர்மமாக உள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொன்குமார் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரது உறவினர்கள் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகிஸ்தானில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..!!
Next post மனிதர்கள் தொடங்கி நாய் வரை நடாத்தப்படும் சிசேரியன்..!!(அதிர்ச்சிப் படங்கள்)