அகதி சிறுவர்கள் இருவருடன் கட்டாய உறவு கொண்ட பெண் அதிகாரி: விசாரணைக்கு உத்தரவு..!!

Read Time:2 Minute, 33 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70சுவீடன் நாட்டில் புகலிடம் தேடுவோர் இல்லத்தில் தங்கிருந்த ஆப்கன் சிறுவர்கள் இருவரை வற்புறுத்தி அந்த இல்லத்தின் பெண் அதிகாரி உறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவீடனில் Sodermanland பகுதியில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் இல்லத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள பெண் அதிகாரி ஒருவர் இரண்டு ஆப்கன் சிறுவர்களை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்திருந்துள்ளார். அந்த சிறுவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பவோ அல்லது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவோ அவர் தயாராக இல்லை என தெரிய வந்ததை அடுத்து அந்த சிறுவர்கள் வேறு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த இளவயது சிறுவர்களை கட்டாயப்படுத்தி இதுவரை 5 முறைக்கும் மேல் உறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விசாரணை என்ற பெயரில் சிறுவர்கள் இருவரையும் ஹொட்டல் அல்லது பெண்களுக்கான இல்லத்தில் வரவழைத்து பாலியல் உறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

சிறுவர்களுடன் உறவு கொள்வதை வீடியோ படமாக பதிவு செய்யவும் கட்டாயப்படுத்தியதை அந்த சிறுவர்கள் உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தை அடியோடு மறுத்த அந்த பெண் அதிகாரி, சமூகத்தில் தமக்கிருக்கும் பெயரை களங்கப்படுத்தும் நோக்கம் இது என பொலிசாரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து பொலிஸ் அதிகாரிகள் அவர்கள் பதிவு செய்த வீடியோவை ஆராய்ந்ததில் அந்த பெண் அதிகாரியுடன் சிறுவர்கள் இருவரும் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அந்த பெண் அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஆப்கன் சிறுவர்கள் இருவரையும் வேறு இல்லத்திற்கு இடம்மாற்றியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரிழிவை வெற்றி கொள்ள சில அற்புதமான வழிகள்!!!
Next post ஐரோப்பிய கால்பந்து: ஸ்பெயின் அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்..!!