சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஜகஸ்தானில் தரை இறங்கியது..!!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஜகஸ்தான் நாட்டில் இன்று பத்திரமாக தரை இறங்கியது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஜகஸ்தானில் தரை இறங்கியது
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஜகஸ்தான் நாட்டில் இன்று பத்திரமாக தரை இறங்கியது.
பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இதேபோல், அங்கிருந்தும் வீரர்கள் பூமிக்கு திரும்பி வருவதுண்டு. அவ்வகையில், இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மூன்று வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஜகஸ்தானில் உள்ள ஸெகஸ்கான் நகரில் இன்று தரை இறங்கியது. அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்களுடன் வந்த அந்த விண்கலம் புறப்பட்ட மூன்று மணி நேரத்தில் தரை இறங்கியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது
Average Rating