காதலியை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை..!!
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் காதலியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலியை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
இந்தூர்:
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதியில் காதலியை கல்லால் தாக்கி கொன்ற வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம், நாசிக் மாவட்டம், சாத்பூரில் உள்ள மஹதா காலனியில் வசித்து வரும் திலிப் வாமன் ஆகவ்(20) என்பவர் அதே பகுதியை சேர்ந்த கோமல் பிரகாஷ் சால்டே(19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். தனியாக பேச வேண்டும் என்று கூறி, அந்தப் பெண்ணை அஞ்னேரி மலைப்பகுதிக்கு நேற்று அழைத்து சென்றார்.
மலையின்மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த திலிப், கோமலை கல்லால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார். இதைக் கண்டு பயந்துப்போன திலிப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உள்ளூர்வாசிகள் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இரு பிரேதங்களையும் கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating