கவர்ச்சியாக நடிக்க சமந்தாவுக்கு காதலர் குடும்பத்தினர் தடை..!!
சமந்தாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதால் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு காதலர் குடும்பத்தினர் தடை விதித்துள்ளனர்.
நடிகை சமந்தாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இளம் நடிகர் ஒருவரை விரைவில் மணந்து கொள்வேன் என்று அவர் அறிவித்து இருந்தார். அந்த நடிகர் யார் என்று தெரிந்துகொள்வதில் பட உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது. தற்போது அவர் நடிகர் நாகசைதன்யா என்று தெரியவந்துள்ளது.
இவர் தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். சமந்தாவும், நாகசைதன்யாவும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
நாகசைதன்யாவின் தாயார் சமீபத்தில் சமந்தாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஒருநாள் முழுவதும் அவருடன் தங்கி இருந்தார். அப்போது சமந்தாவின் நடவடிக்கைகள் அவருக்கு பிடித்து விட்டதால் திருமணத்துக்கு முழு சம்மதத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த வருடம் இறுதியில் சமந்தா-நாகசைதன்யா நிச்சயதார்த்தத்தை நடத்தவும் அடுத்த வருடம் தொடக்கத்தில் திருமணத்தை நடத்தவும் இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சமந்தா படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு நாகசைதன்யா குடும்பத்தினர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பல படங்களில் சமந்தா கவர்ச்சியாக நடித்து இருந்தார். சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்தின் பாடல் காட்சியொன்றில் துணிச்சலாக நீச்சல் உடையில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார்.
தற்போது அவர் நடித்து வரும் படங்களிலும் கவர்ச்சியாக நடிக்க இயக்குனர்கள் நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் நாகசைதன்யா குடும்பத்தினர் இனிமேல் சமந்தா கவர்ச்சி காட்சிகளில் நடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
நாகசைதன்யா வசதியான பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது தாத்தா நாகேஸ்வரராவ் பழம்பெரும் நடிகர் ஆவார். ஐதராபாத்தில் சொந்தமாக ஸ்டுடியோக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. சமந்தாவும் காதலர் குடும்பத்தினர் கவுரவத்தை காப்பாற்ற கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளார்.
Average Rating