யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தண்ணீர் பவுசர் மோதி தாய் பலி மகள் காயம்..!!

Read Time:2 Minute, 2 Second

498cda69-641c-43c9-a82a-095cab5f0e6aயாழ்ப்பாணம் மனிதவுரிமை அலுவலகத்துக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இவ் விபத்து இன்று காலை சனின்னிழமை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இவ் விபத்தில் யாழ்ப்பாணம் றக்கா வீதியை சேர்ந்த சந்திரராஜா சவுந்தராணி என்பவரே உயிரிழந்ததுடன் அவரது மகள் சங்கீதா என்பவரே படுகாயமடைந்தவராவர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்றைய தினம் காலை யாழ்ப்பாணம் மனிதவுரிமை அலுவலகத்திற்கு முன்பான வீதியால் குறித்த பெண்ணும் அவரது மகளும் திருமண வீடொன்றுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன் போது சம்பவ இடத்தை அண்மித்த போது இராணுவத்தினருடைய நீர் கொண்டு செல்லும் வாகனமும் வேகமாக யாழ் வைத்தியசாலை வீதியை நோக்கி வந்துள்ளது. இதன் போதே குறித்த இரு வாகனமும் மோதியுள்ளன. இதனால் மோடடார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது மகள் படுகாயமடைந்திருந்தார்.

மேலும் விபத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ வாகன சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீரர்களை அழைத்துவந்த விண்கலம் கஜகஸ்தானில் தரை இறங்கியது..!!
Next post பாடசாலை முடிந்து வீடு திரும்பாத மாணவி சடலமாக மீட்பு…!!