எம்.எல்.ஏ ஆலையில் தலித் பெண் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை: உ.பி.யில் பரபரப்பு..!!
Read Time:1 Minute, 12 Second
உத்திர பிரதேசத்தில்,பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.விற்கு சொந்தமான பேப்பர் ஆலையில் 38 வயதான தலித் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த ஆலையில் பணியாற்றி வந்த பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், மேற்குறிப்பிட்டுள்ள பெண் கழுத்தை நெரித்து கொல்லப்படும் முன் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
உடலை கைபற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், சம்பவத்தை தொடர்ந்து தலைமறைவாகி விட்ட தொழிலாளர் ஒப்பந்ததாரர் குர்ஷித்தை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Average Rating