கல்லூரிக்கு சென்ற ஆசிரியை மீது ஆசிட் வீச்சு: பைக் ஆசாமிகளுக்கு வலைவீச்சு..!!

Read Time:1 Minute, 24 Second

201606182000346442_Acid-attack-on-college-teacher_SECVPFமத்திய பிரதேச மாநிலம் போபால் அரேரா காலனியைச் சேர்ந்தவர் ஷைலஜா நம்தியோ (வயது 24). கல்லூரி ஆசிரியையான இவர் இன்று காலை 9 மணியளவில் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவர் மீது ஆசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

அவர்களில் ஒருவன் தனது முகத்தினை திரையிட்டு மறைத்திருந்ததாகவும், மற்றொருவன் புர்கா அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. புர்கா அணிந்தவர் ஆணா அல்லது பெண்ணா என தெரியவில்லை.

ஆசிட் பட்டதால் ஆசிரியைக்கு கை மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இச்சம்பவத்தினை அடுத்து அடையாளம் தெரியாத 2 நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓசூரில் போலீஸ் ஏட்டு குத்தி கொலை: வாட்ஸ்அப்பில் படங்களை வெளியிட்டது யார்?- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை..!!
Next post குழந்தைகளை தனியாக பாத்ரூம் அனுப்பி வைப்பரா நீங்கள்?… இதை கட்டாயம் அவதானிக்கவும்…!!