பக்தர்கள் சென்ற ரயிலின் மீது கல் வீச்சு…!!
Read Time:1 Minute, 3 Second
கொழும்பிலிருந்து மிஹிந்தளை நோக்கி சென்ற இரு ரயில்களுக்கு மிஹிந்தளையை அண்மித்த பகுதியில் வைத்து இனந்தெரியாத சிலர் கற்கள் எறிந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அனுராதபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று, பொசன் தின நிகழ்வுக்காக பக்தர்களை ஏற்றிச் சென்ற இரு விசேட ரயில்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், ரயிலில் பயணித்த பக்தர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லையெனவும், குறித்த சம்பவம் தொடர்பாக மிஹிந்தளை ரயில்வே நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Average Rating