குருநாகல் பகுதியில் பங்களாதேஷ் பிரஜைகள் கைது….!!
சட்டவிரோதமாக நாட்டில் தங்கி, கூலி நிமித்தம் வேலை செய்த 16 பங்களாதேஷ் பிரஜைகள் குருநாகல் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாணதுறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் 16 பேரும் சுற்றுலா விசா முடிவுற்றிருந்த நிலையில் நாட்டில் தங்கி, கூலி நிமித்தம் குருநாகல் பகுதியின் பல்வேறு இடங்களில் வேலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது
இதேவேளை, இவர்களை பாணதுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணதுறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating