500 வருடங்கள் பழைமையான கப்பல் சிதைவுகளிலிருந்து 185 கோடி ரூபா பெறுமதியான தங்க நாணயங்கள் மீட்பு…!!
நமீபியாவிவில் 500 வருடங்கள் பழைமையான கப்பல் சிதைவுகளிலிருந்து சுமார் 185 கோடி ரூபா பெறுமதியான தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆபிரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதியிலுள்ள நமீபிய கரையோரத்தில் கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்படுவது அபூர்வமல்ல. எனினும், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தக்கப்பல் சிதைவு மிக விசேடமான ஒன்றாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இக்கப்பல் சிதைவுகளிலிருந்து பெருந்தொகையான தங்க நாணயங்கள், எலும்புக்கூடுகள், யானைத்தந்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக தங்க நாணயங்கள் பீரங்கிக் குழாயொன்றில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றின் பெறுமதி 13,000,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 185 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் சுரங்க அகழ்வு நடவடிக்கையின் போதே இக்கப்பல் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த தொல்பொருளியலாளரான கலாநிதி டியெட்டர் நோலி இப்பகுதிக்கு அழைக்கப்பட்டு மேற்படி பொருட்கள் ஆராயப்பட்டன.
500 வருடங்களுக்குமுன் சேர் பிரான்சிஸ்கோ டி நொரோன்ஹா தலைமையில் சென்ற போர்த்துகேய கப்பல் ஒன்று நமீபியாவுக்கு அருகில் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating