பாடி அருகே மாடியில் இருந்து விழுந்து டிரைவர் பலி…!!
Read Time:40 Second
பாடியை அடுத்த மண்ணூர் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் தங்கப்பாண்டியன் (வயது 40) லாரி டிரைவர். நேற்று இரவு இவர் வீட்டு மாடியில் தூங்கினார்.
நள்ளிரவில் எழுந்த போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த தங்கப் பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating