குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கணவன்–மனைவி தற்கொலை…!!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையங்குளத்தை சேர்ந்தவர் ராமையா (வயது60), கூலி தொழிலாளி. இவரது மனைவி அய்யம்மாள் (58). இவர்களுக்கு இசக்கிமுத்து என்ற மகனும், ராணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அய்யம்மாள் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரி சென்று சிகிச்சை பெற்றும் வந்தார்.
இருப்பினும் அவருக்கு உடல் நலம் சரியாகவில்லையாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளார். மானைவி இல்லாமல் தான் மட்டும் வாழ ராமையாவும் விரும்ப வில்லை.
இதனால் கணவன்– மனைவி இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து மயங்கினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார். கணவன்–மனைவி இருவரும் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர்களது மகன் இசக்கிமுத்து கொடுத்த புகாரின்பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating