நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற மூவரின் சடலங்கள் மீட்பு..!!

Read Time:1 Minute, 29 Second

downloadநயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா பாருஜன் (வயது 23), தேசவராசா சஞ்சயன் (வயது 22) மற்றும் உதயகுமார் சசிதரன் (வயது 21) ஆகிய மூவருமே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

நயினாதீவு அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவிற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

குளித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் மூவரையும் திடிரென காணாத நிலையில், மற்றைய இளைஞர்கள் அங்கிருந்த கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம், மூவரையும் கடற்படையினர் பல மணி நேரம் தேடிய போது, மாலை 4.00 மணியளவில் மூவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை நயினாதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறப்பர் பெண்களின் மிரட்டல் சாகசம்: கண்ணைக் கட்ட வைக்கும் காட்சி…!! வீடியோ
Next post செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!!