மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..!!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவா-எலிய ஸ்காட் மேல்பிரிவு தோட்டத்தை ஊடறுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீசிய மினி சூறாவளியினால் மரமொன்று வேரோடு சாய்ந்து குடியிப்பொன்றின் மீது விழுந்தமையால்
குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயான வை.டி.சீலாவதி (வயது 46 ) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இவருடன் உறங்கிக்கொண்டிருந்த இவரின் கணவரும் மற்றும் இரு பிள்ளைகளும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற நுவரெலியா பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் நுவரெலியா நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் நுவரெலியா பொலிஸார் குறித்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்
Average Rating