சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர்கள் நால்வர் கைது…!!
Read Time:1 Minute, 6 Second
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் திருகோணமலை கற்பிட்டி பகுதியில் வைத்து கடற்படையினர் மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது இவர்கள் பொது மக்களுக்கு பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர்கள் சுற்றுலா விஸாவில் நாட்டிற்கு வருகை தந்து விஸா விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating