வேலூர் கஸ்பாவில் காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி தற்கொலை…!!
வேலூர் கஸ்பா முதல் பயர்லைன் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 26). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பிரியா (25). கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தம்பதி இருவரும் ஓட்டு வீட்டில் குடியேறினர். மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கினர். திருமணமான சில நாட்களில் வெங்கடேசன் அடிக்கடி மது குடிக்க தொடங்கினார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மதுவை கைவிட மறுத்த வெங்கடேசன் தினமும் மது குடித்தார். இதனால் வீட்டில் குடும்பத்தகராறு நீடித்தது.
வெங்கடேசன் நேற்று இரவு மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர்கள் வீட்டு உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கி இறந்தனர்.
இன்று காலை வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்ற போது கணவன், மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி வேலூர் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணமாக கிடந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கஸ்பாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating