வீட்டு சமையல் சிலிண்டர் வெடித்து 5 வயது குழந்தை பரிதாப பலி…!!

Read Time:1 Minute, 59 Second

201606201554216701_1-killed-4-injured-in-cylinder-blast_SECVPFவீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை சீர்படுத்தியபோது சிலிண்டர் வெடித்துச் சிதறிய விபத்தில் 5 வயது குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பேகுசராய் மாவட்டத்திலுள்ள ரஹுவா கிராமத்தை சேர்ந்தவர் ராம் வருண் ராய். இவரது மனைவி வீட்டில் சமையல் செய்யும்போது கியாஸ் கசியும் வாசனை வருவதாக ராம் வருண் ராயிடம் தொடர்ந்து கூறிவந்துள்ளார். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் கண்ணையா குமார் என்பவர் நேற்றிரவு கியாஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவை சீர்படுத்த முயன்றார்.

அப்போது, பயங்கர சப்தத்துடன் திடீரென்று சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கண்ணையா குமார், ராம் வருண் ராயின் மனைவி லீலா தேவி மற்றும் லீலாவின் குழந்தைகளான கரம்வீர், கோலு, சோட்டு ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் வசிப்பவரக்ள் அவர்கள் ஐந்து பேரையும் அருகாமையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கி சிகிச்சை பலனின்றி லீலாவின் ஐந்துவயது ஆண்குழந்தையான சோட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சாஹெப்பூர் கமால்நகர் போலீசார், மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெர்மனி விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அனைத்து விமானங்களிலும் தீவிர சோதனை…!!
Next post அமெரிக்காவில் 51 வயது ஆணுக்கு 14 வயது சிறுமியை பரிசளித்த பெற்றோர்…!!