பொகவந்தலாவையில் குடும்பஸ்தர் ஒருவா் துாக்கிட்டு தற்கொலை…!!
Read Time:1 Minute, 17 Second
பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் குடும்பஸ்தா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 05 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையெனவும், தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளது.
குறித்த சடலம் திடீர் மரண விசாரனையாளரின் விசாரனையின் பின் சட்ட வைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating