சட்டக்கல்லூரி மாணவி கொலை: ஜெயிலில் கொலையாளியை அடையாளம் காட்டிய பக்கத்து வீட்டு பெண்…!!

Read Time:1 Minute, 51 Second

201606211055570152_Law-student-killed-a-neighbor-woman-that-identified-the_SECVPFகேரள மாநிலம் கொல்லம் அருகே பெரும்பாவூரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஜிஷா கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. சந்தியா திறமையாக துப்பு துலக்கி அசாம் வாலிபர் அமிருல் இஸ்லாம் (வயது24) என்பவரை கைது செய்தார்.

ஜிஷாவிடம் அமிருல் இஸ்லாம் சில்மி‌ஷம் செய்ததால் அவரை ஜிஷா செருப்பால் அடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரிய வந்தது.

தற்போது அமிருல் இஸ்லாம் காக்க நாடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜெயிலில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது இந்த கொலை வழக்கில் சாட்சிகளில் ஒருவரான பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண், கொலையாளி அமிருல் இஸ்லாமை அடையாளம் காட்டினார்.

ஜிஷாவிடம் அவர் தகராறு செய்தததை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் அமிருல் இஸ்லாமை வருகிற 30-ந்தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காக்கநாடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று பெரும்பாவூர் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குஜராத் மாநிலத்தில் மாணவியை கற்பழித்த பா.ஜனதா தலைவர்…!!
Next post உடுப்பி அருகே பயங்கரம்… பள்ளி வேன்-பஸ் மோதல்.. 6 மாணவிகள் உட்பட 8 பேர் பரிதாப சாவு…!! வீடியோ