இயற்கையின் கோரத்தாண்டவம்… சாரதியுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட லாரி…!! வீடியோ
Read Time:1 Minute, 8 Second
இயற்கை சீற்ற பேரழிவுகளில் ஒன்று தான் மழையினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு… பெய்யும் பலத்த மழையினால் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திலிருந்து சாலையில் பயணிக்கும் வாகனங்களும், அதிலுள்ள சாரதிகளும் தப்பிப்பது பெரும் கஷ்டம் ஆகிவிடுகிறது.
இந்தியாவில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள மலபிரபா ஆற்றில் வெள்ளம் பாய்கிறது. தரைபாலம் ஒன்றை தாண்டி வெள்ளம் சென்ற நிலையில், டேங்கர் லாரி பாலத்தை கடக்க முயற்சித்தது.
ஆனால் தண்ணீரின் வேகத்தில் ஓட்டுநரால் லாரியை கட்டுப்படுத்த முடியவில்லை. லாரியை வெள்ளம் அடித்து சென்று விட்டது. அருகில் இருந்த மக்கள் லாரி டிரைவர், கிளீனரை கயிறு மூலம் மீட்டனர்.
Average Rating