ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்…!!
யாழில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியொருவர் ஐந்து மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தினர்.
குறித்த ஆசிரியரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு இதன் போது மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான அறிக்கையொன்று வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ் வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தரப்பினரிடையேயும் விசாரணை மேற்கொண்டு இந்த அறிக்கையினை தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஆசிரியொருவர் ஐந்து மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியமை தொடர்பான விசாரணை அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் நியூஸ் பெஸ்ட்டுக்கு கூறினார்.
Average Rating