இரட்டைக் குழந்தையை பெறவிருந்த தாய் விபத்தில் சிக்கினார்: மூவரின் உயிரையும் காப்பாற்றும் டாக்டர்களின் முயற்சி தோல்வி – பலத்த காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதி…!!

Read Time:2 Minute, 37 Second

17474Dead bodyதனது கண­வ­ருடன் மோட்டார் சைக்­கிளில் பய­ணித்து கொண்­டி­ருந்த இரு குழந்­தை­களை பிர­ச­விக்­க­வி­ருந்த 20 வய­தான கர்ப்­பிணித் தாய் விபத்­துக்­குள்­ளாகி இரு குழந்­தை­க­ளுடன் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அவ­ரது கணவர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி பொசன் தினத்­தினை முன்­னிட்டு தான நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­காக இத் தம்­ப­தி­யினர் மோட்டார் சைக்­கிளில் சென்று கொண்­டி­ருந்தபோது தெஹி­யத்­த­கண்­டிய தொல­கந்த பிர­தே­சத்தில் வேக­மாக வந்த முச்­சக்­கரவண்­டி­யொன்று குறித்த மோட்டார் சைக்­கிளை மோதி விபத்­துக்­குள்­ளாக்கி விட்டு தப்பிச் சென்­றுள்­ளது.

இந்­நி­லையில் விபத்தில் காய­ம­டைந்த கர்ப்­பிணி தாயுடன் இரட்டை குழந்­தை­க­ளையும் காப்­பாற்­று­வ­தற்கு வைத்­தி­யர்கள், தாதி­யர்கள் மற்றும் வைத்­தி­ய­சாலை ஊழி­யர்கள் கடும் முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்தபோதும் சிகிச்சை பல­னின்றி அவர்கள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

தெஹி­யத்­த­கண்­டிய துவா­ர­கல பிர­தே­சத்தை சேர்ந்த ஏழு மாத கர்ப்­பி­ணி­யான நிரோ­ஷனி ராஜ­பக்ஷ(20) என்ற பெண்ணே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ள நிலையில் அவ­ரது கண­வ­ரான டீ.எம். தனுஷ்க மது­சங்க(22), பலத்த காயத்­துடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

இதே­வேளை, விபத்­தினை ஏற்­ப­டுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்­சக்­கர வண்டி சார­தியை கைது செய்­துள்­ள­தாக தெஹி­யத்­த­கண்­டிய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தெஹியத்த கண்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை யில் இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசிரியர் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டம்…!!
Next post வெள்ளவத்தையில் ஒரு கோடி ரூபா போதைப் பொருளுடன் மூவர் கைது…!!