நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!!
Read Time:56 Second
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பிரதேசத்தில் ஒருவரை பொல்லால் அடித்து கொலைச் செய்த குற்றவாளிகளாக இனங்கண்ட நான்கு பேருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
சம்மாந்துறை பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை நீதிபதி நவரட்ண மாறசிங்க, இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கினார்.
Average Rating