டெங்கு நோய் அபாய நிலை ; கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் அவதானம்…!!
Read Time:1 Minute, 9 Second
நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவல் தீவிரமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து மாத காலத்தில் 17 ஆயிரத்து 956 டெங்கு நோயாளர்கள் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ளனர். மேல்மாகாணத்தில் அதிகளவான டெங்கு அபாய நிலைமைகள் உள்ளதென இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில காலமாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் பௌதீக காரணிகளின் காரணமாக நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக உள்ளனர் எனவும் ஏனைய பகுதிகளிலும் சரளமான அளவும் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கள் தெரிவித்துள்ளது.
Average Rating