யாழில் கழுத்தில் கத்தி வைத்து சோடா கொள்ளை…!!
Read Time:1 Minute, 15 Second
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உணவகம் ஒன்றினுள் அத்து மீறி நுழைந்து உரிமையாளரின் கழுத்தில் கத்தி வைத்து சோடா கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்று உள்ளது.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது ,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கூடிய 6 இளைஞர்கள் அருகில் இருந்த உணவகம் ஒன்றினுள் அத்து மீறி நுழைந்து உரிமையாளரை கைகளால் தாக்கி காயமேற்படுத்தி உள்ளனர்.
அத்துடன் உரிமையாளரின் கழுத்தில் கத்தி வைத்து தலா 200 ரூபாய் பெறுமதியான 4 சோடாக்களை (800 ரூபாய் பெறுமதி ) கொள்ளையிட்டு உள்ளனர். அத்துடன் உணவகத்தில் இருந்த கண்ணாடி சொக்கேஸ் ஒன்றினை அடித்து நெருக்கி 700 ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளனர்.
Average Rating