அபூர்வமான உயிரினம் இராஜநாகம் தொடர்பில் பரிசோதனை…!!
Read Time:1 Minute, 23 Second
தெமடபிட்டி-தம்மகம பிரதேசத்தின் தென்னந்தோட்டம் ஒன்றில் இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இராஜநாகம் தொடர்பில் பரிசோதனைகளை செய்ய தேசிய அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் சிலர் குறித்த பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நாகமானது 13 அடி நீளமானது என்றும், இதுவரை இவ்வகையான நாகங்கள் இலங்கையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த நாகத்தின் உடலை பாதுகாத்து தேசிய அருங்காட்சியகத்தில் மக்கள் பாவனைக்கு வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அதிகாரி சமல்காகொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த அபூர்வமான உயிரினங்கள் இறந்து கிடக்கும் தகவல்கள் கிடைத்தால் அது தொடர்பில் தேசிய அருங்காட்சியக அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Average Rating