இலங்கையில் நடந்த கொடுமையான சம்பவம் ; சீரழியும் கலாச்சாரங்கள்…!!
Read Time:1 Minute, 25 Second
திருகோணமலை -பன்குளம் பகுதியில் கணவன் மனைவியை திருவலை குற்றியினால் தாக்கி தலையில் பாரிய காயம் ஏற்பட்ட நிலையில் மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் நேற்றிரவு (22) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயங்களுக்குள்ளானவர் திருகோணமலை-பன்குளம் பகுதியைச்சேர்ந்த எஸ்.தங்கம்மா (54 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணவரும் மனைவியும் ஒன்றாக மது அருந்திக்கொண்டிருக்கும் போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினாலேயே தலையில் திருவலை குற்றியினால் தாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
தாக்குதல் நடாத்திய கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் குறித்து மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating