பிரித்தானியாவில் 3,000 க்கும் அதிகமான சிறார்கள் மீதான பாலியல் வழக்குகள் பதிவு…!!
பிரித்தானியாவில் கடந்த ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட சிறார்கள் மீதான இணைய வழிப் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் நூற்றுக்கும் அதிகமானவை பாலியல் வல்லுறவு வழக்குகளாகும். மற்றவை பாலியல் தாக்குதல், குழந்தைகளை பாலியலில் உறவில் ஈடுபடுத்த தயார் செய்வது, பாலியல் நடவடிக்கைகளில் குழந்தைகளை பங்கேற்க வைக்கத் தூண்டுவது போன்ற குற்றங்கள் என தெரியவந்துள்ளது.
இந்தப் புள்ளி விபரங்களைக் குறித்து பிரிட்டனின் சிறார்களுக்கான தொண்டு அமைப்பான, என்.எஸ்.பி.சி.சி , இவற்றில் 270க்கும் மேற்பட்ட குற்றங்கள் 10 வயதிற்கும் குறைவான சிறார்கள் மீது செய்யப்பட்டவை என்றும், இதில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு ஒரே ஒரு வயதுதான் ஆகியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
Average Rating