மலைச்சிங்கத்தின் வாயில் அகப்பட்ட 5 வயது மகனை போராடி காப்பாற்றிய பெண்…!!

Read Time:2 Minute, 9 Second

175203514lion_22062016_R25_CMYஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் சிங்­க­மொன்­றிடம் அகப்­பட்ட தனது 5 வய­தான மகனை, அச்­சிங்­கத்­துடன் போரா­டி­யதன் மூலம் காப்­பாற்­றி­யுள்ளார்.

கொல­ராடோ மாநி­லத்தைச் சேர்ந்த இப்பெண், தனது வீட்­டுக்கு அருகில் மலைச்­சிங்கம் ஒன்று தனது மகனை கடித்­துக்­கொண்­டி­ருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்தார்.

அச்­சி­றுவன் தன்னை விடு­வித்­துக்­கொள்ள முடி­யாமல் தடு­மா­றினான். அவ்­வே­ளையில் அச்­சி­று­வனின் தலை முழு­வதும் மேற்­படி சிங்­கத்தின் வாய்க்குள் இருந்­தது.

எனினும், அப்பெண் பின்­வாங்­க­வில்லை. மாறாக அம்­மி­ரு­கத்­துடன் போராடி அவர் தனது மகனை காப்­பாற்­றினார்.

அந்த மலைச்­சிங்­கத்தின் வாயை பல­வந்­த­மாக திறந்து தனது மகனை அப்பெண் விடுவித்­துள்ளார். அவர் ஒரு ஹீரோ என பொலிஸ் அதி­கா­ரி­யான மைக்கல் பக்­லியோன் தெரி­வித்­துள்ளார்.

மேற்­படி சிறு­வனின் தலை, முகம், கழுத்துப் பகு­தி­களில் ஆழ­மான காயங்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. பின்னர் அவன் ஹெலி­கொப்டர் மூலம் அழைத்துச் செல்­லப்­பட்டு டென்வர் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப் ­பட்டான்.

அவனின் தாய்க்கும் காயங்கள் ஏற்­பட்­டி­ருந்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

கொல­ராடோ மாநி­லத்தில் சுமார் 4500 மலைச்­சிங்­கங்கள் வசிப்­ப­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அங்கு 1,990 ஆம் ஆண்­டி­லி­ருந்து இச்சிங்கங்களினால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்­தா­னி­யாவில் 3,000 க்கும் அதி­க­மான சிறார்­க­ள் மீதான பாலியல் வழக்­குகள் பதி­வு…!!
Next post குழந்தையின் மேல் சிந்திய கொதிக்கும் சாம்பார்… சிகிச்சை பலனின்றி 3 வயது குழந்தை பலி…!!