மதுபானத்தில் மனைவி விஷம் கலந்திருக்கலாமென்ற சந்தேகத்தால் தலாத்து ஓயா வைத்தியசாலையில் அனுமதிபெற்ற ஹோட்டல் முதலாளி -மனநல வைத்தியரிடம் செல்லுமாறு டாக்டர்கள் ஆலோசனை…!!

Read Time:2 Minute, 58 Second

1755540மது­பான போத்­த­லுக்குள் மனை­வி­யினால் விஷம் கலக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் தலாத்­து ­ஓயா பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒருவர் தலாத்து ஓயா வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று தாமாகவே அனு­மதி பெற்­றுள்­ள­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

இரு பிள்­ளை­களின் தந்­தை­யான இவர் வேறொரு பெண்­ணுடன் தவறான தொடர்­பினை பேணி வந்­த­மை­யினால் தனது மனை­வி­யுடன் இவருக்கு முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இதன் ­கா­ர­ண­மாக தனது மனைவி தான் அருந்­து­வ­தற்­காக வைத்­தி­ருந்த மது­பா­னத்தில் விஷத்­தினை கலந்­தி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தில் தானா­கவே சென்று வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­க­பட்டார் என தெரி­ய­வந்­துள்­ளது.

இவர் தலாத்­து­ஓயா அனி­வத்த பிர­தே­சத்தில் ஹோட்­ட­லொன்­றினை நடத்தி வரு­கின்ற நிலையில் சம்­பவ தினத்­தன்று மது­பான போத்தல் ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்­டுக்கு வந்­துள்ளார்.

பின்னர் இவர் தான் வாங்கி வந்த மது­பா­னத்தில் சிறி­த­ளவை அருந்­தி­விட்டு சிகரெட் ஒன்­றினை வாங்­கு­வ­தற்­காக அரு­கி­லுள்ள கடைக்கு சென்­றுள்ளார்.

பின்னர் மறு­ப­டியும் வீடு திரும்­பி­யி­ருந்த நிலையில் தான் மீதி­யாக வைத்­தி­ருந்த மது­பா­னத்­தை அருந்­தி­ய­போது தொண்­டையில் ஒரு வகை­யான எரிச்சல் ஏற்­ப­டு­வ­தாக உணர்ந்­துள்ளார்.

தான் சிக­ரெட் வாங்­கு­வ­தற்­காக வெளியில் சென்­றி­ருந்த போது தன்­மீ­துள்ள கோபத்தின் கார­ண­மாக மனைவி மது­பா­னத்தில் விஷத்தை கலந்­தி­ருப்­பாரோ என்ற சந்­தேகம் எழுந்­த­த­னை­ய­டுத்து உட­ன­டி­யாக வீட்­டி­லி­ருந்து சென்று தனது நிலை­மையினை எடுத்து கூறி வைத்­தி­ய­சா­லையில் அனு­மதி பெற்­றுள்ளார்.

இந்­ந­பரை பரி­சோ­தித்த வைத்­தியர்கள், அவரின் உடலில் எந்த வகையான விஷமும் கலக்கவில்லையென தெரிவித்ததோடு அவரை மனநல வைத்தியரொருவரிடம் சிகிச்சைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காங்கேசன்துறை மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை ; பெண் ஆசிரியர் விளக்கமறியலில்..!!
Next post மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தம்..!!