மதுபானத்தில் மனைவி விஷம் கலந்திருக்கலாமென்ற சந்தேகத்தால் தலாத்து ஓயா வைத்தியசாலையில் அனுமதிபெற்ற ஹோட்டல் முதலாளி -மனநல வைத்தியரிடம் செல்லுமாறு டாக்டர்கள் ஆலோசனை…!!
மதுபான போத்தலுக்குள் மனைவியினால் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தலாத்து ஓயா பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தலாத்து ஓயா வைத்தியசாலைக்குச் சென்று தாமாகவே அனுமதி பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரு பிள்ளைகளின் தந்தையான இவர் வேறொரு பெண்ணுடன் தவறான தொடர்பினை பேணி வந்தமையினால் தனது மனைவியுடன் இவருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தனது மனைவி தான் அருந்துவதற்காக வைத்திருந்த மதுபானத்தில் விஷத்தினை கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தானாகவே சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார் என தெரியவந்துள்ளது.
இவர் தலாத்துஓயா அனிவத்த பிரதேசத்தில் ஹோட்டலொன்றினை நடத்தி வருகின்ற நிலையில் சம்பவ தினத்தன்று மதுபான போத்தல் ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர் இவர் தான் வாங்கி வந்த மதுபானத்தில் சிறிதளவை அருந்திவிட்டு சிகரெட் ஒன்றினை வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.
பின்னர் மறுபடியும் வீடு திரும்பியிருந்த நிலையில் தான் மீதியாக வைத்திருந்த மதுபானத்தை அருந்தியபோது தொண்டையில் ஒரு வகையான எரிச்சல் ஏற்படுவதாக உணர்ந்துள்ளார்.
தான் சிகரெட் வாங்குவதற்காக வெளியில் சென்றிருந்த போது தன்மீதுள்ள கோபத்தின் காரணமாக மனைவி மதுபானத்தில் விஷத்தை கலந்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்ததனையடுத்து உடனடியாக வீட்டிலிருந்து சென்று தனது நிலைமையினை எடுத்து கூறி வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளார்.
இந்நபரை பரிசோதித்த வைத்தியர்கள், அவரின் உடலில் எந்த வகையான விஷமும் கலக்கவில்லையென தெரிவித்ததோடு அவரை மனநல வைத்தியரொருவரிடம் சிகிச்சைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating