ஜாபர்கான்பேட்டை நிதி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருடிய வாலிபர் கைது…!!
Read Time:1 Minute, 17 Second
சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் முகேஷ் ஜெயின். இவர் வீட்டு அருகிலேயே மோட்டார் சைக்கிள்களுக்கான நிதி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கடந்த 22-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு சென்ற முகேஷ் மறுநாள் வந்து பார்த்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி குமரன்நகர் போலீசில் முகேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா ஒன்று கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அதை வைத்து துப்பு துலக்கப்பட்டது. அப்போது ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த வினோத் என்ற வாலிபர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Average Rating