பீகாரில் வீட்டில் இருந்த இளம்பெண்ணை இழுத்து சென்று கொடூரமாக கற்பழித்த கும்பல்: ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்…!!

Read Time:3 Minute, 41 Second

downloadடெல்லியில் 2012-ம் ஆண்டு மாணவி ஒருவரை பஸ்சில் கடத்தி சென்று ஒரு கும்பல் கொடூரமாக கற்பழித்தது. இதில் அந்த மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதே போன்ற சம்பவம் ஒன்று இப்போது பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள மொய்திகரி அருகே உள்ளது ஜூமைதோலா கிராமம். இங்கு 21 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயாருடன் வசித்து வந்தார்.

இந்த ஊரைச்சேர்ந்தவர் சமியுல்லா. இவர் சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தார்.

அந்த படத்தை காட்டி இளம்பெண்ணிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். கடந்த 15-ந்தேதி வெளியே சென்ற அந்த பெண்ணிடம் சென்று சமியுல்லா பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த அந்த பெண் அவரை கத்தியால் தாக்கினார்.

இது சமியுல்லாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரம் கழித்து தனது நண்பர்கள் 4 பேருடன் சமியுல்லா அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக அவர்கள் வெளியே இழுத்து சென்றனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் அவரை கற்பழித்தனர். அதுமட்டுமல்ல கொடூரமாகவும் தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரை சாலையோரம் போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஒரு வாரமாக இந்த வி‌ஷயம் வெளியே தெரியாமல் இருந்தது. இதுபற்றி உள்ளூர் டி.வி. சேனல்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் செய்தியை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் இப்போது தான் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமியுல்லா உள்பட 5 பேர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை தேடிவருகிறார்கள்.

பீகாரில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல பீகாரில் முசாபர் நகரில் மாங்காய் பறிக்க சென்ற 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பிரமோத்ஷானி, கமலேஷ்ஷானி ஆகியோர் கடத்தி சென்று கற்பழித்தனர். இதில் அந்த பெண் மயங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பித்தப்பை-கல்லீரல் கோளாறு: 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய பெற்றோர் கோர்ட்டில் வழக்கு…!!
Next post நுங்கம்பாக்கத்தில் இன்று காலை பயங்கரம்: ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் கொலை…!!