மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தம்..!!

Read Time:1 Minute, 19 Second

0சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அரசு தலைமை மருத்துமவனையில் கடந்த வாரம் கண் அறுவை சிகிச்சை செய்தவர்களில் 18 பேரின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தவறான ஆபரேசன் காரணமாக கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் பரவியது. எனவே, இதுபற்றி சேலம் மாவட்ட சுகாதாரதுறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையில் இருந்து வரும் உயர்மட்டக் குழுவும் விசாரணை நடத்த உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மருந்துகள் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபானத்தில் மனைவி விஷம் கலந்திருக்கலாமென்ற சந்தேகத்தால் தலாத்து ஓயா வைத்தியசாலையில் அனுமதிபெற்ற ஹோட்டல் முதலாளி -மனநல வைத்தியரிடம் செல்லுமாறு டாக்டர்கள் ஆலோசனை…!!
Next post புல்வெட்டும் வாகனத்தை மதுபோதையில் செலுத்திச் சென்றதாக நபர் மீது குற்றச்சாட்டு…!!