மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தம்..!!
Read Time:1 Minute, 19 Second
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அரசு தலைமை மருத்துமவனையில் கடந்த வாரம் கண் அறுவை சிகிச்சை செய்தவர்களில் 18 பேரின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தவறான ஆபரேசன் காரணமாக கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் பரவியது. எனவே, இதுபற்றி சேலம் மாவட்ட சுகாதாரதுறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையில் இருந்து வரும் உயர்மட்டக் குழுவும் விசாரணை நடத்த உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை மருந்துகள் மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Average Rating