திருச்சி அருகே மாணவியை கற்பழித்த ஊர்த்தலைவர் கைது…!!

Read Time:2 Minute, 48 Second

201606241218341147_village-chief-held-for-molested-school-girl_SECVPFதிருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்தவர் வைரம் (வயது 50). ஊர் தலைவரான இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயதான பாலிடெக்னிக் கல்லூரி மாணவியை மயக்க மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்தார். மேலும் இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி அந்த மாணவியுடன் தொடர்ந்து உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.

இச்சம்பவம் தொடர்பாக வைரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆலத்தூர் கிராம மக்கள் கடந்த 12ந் தேதி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வைரம் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, திருவெறும்பூர் இன்ஸ் பெக்டர் மதன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ரோந்து சென்ற போது அந்த வழியாக மொட்டை அடித்துக் கொண்டு நடந்து சென்றவரை சந்தேகப்பட்டு பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து கொண்டிருந்த வைரம் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போ லீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறுகையில், போலீசார் தேடுவதை அறிந்த நான் கடந்த 14ந் தேதி மதுரைக்கு சென்றேன். அங்கு போலீசார் வந்ததை அறிந்து கோவை சென்றேன். அங்கும் போலீசார் வந்ததால் திருப்பதி சென்று மொட்டை அடித்துக் கொண்டு திருச்சி வந்தேன். எனது வக்கீலை சந்திக்க சென்ற போது போலீசாரிடம் சிக்கி கொண்டேன் என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நுங்கம்பாக்கத்தில் இன்று காலை பயங்கரம்: ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் கொலை…!!
Next post புழலில் வக்கீல் கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது…!!