பாகிஸ்தானில் டீ வழங்க தாமதமானதால் மனைவி வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்…!!

Read Time:1 Minute, 15 Second

201606251245506379_Husband-angry-for-wife-murder-in-pakistan_SECVPFபாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் நஜிகோல்கி. இவர் கீசோ என்ற இந்து பெண்ணை திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த நஜிகோல்கி தனது மனைவி கீசோவிடம் டீ தரும்படி கேட்டார். அப்போது அவர் தாமதமாக டீ எடுத்து வந்தார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற நஜி கோல்கி கடும் ஆத்திரம் அடைந்தார். உடனே மனைவி கீசாவின் தலையை துண்டித்து படுகொலை செய்தார்.

இச்சம்பவம் அவரது குழந்தைகள் கண் முன்னே நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறினர். இதற்கிடையே வீட்டில் இருந்து தப்பி ஓடிய நஜிகோல்கியை போலீசார் தேடி வந்தனர்.

ஆனால் அவர் போலீசில் சரண் அடைந்தார். கடும் கோபம் அடைந்ததால் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் கொடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கில் தொங்கி உயிரிழந்த ஹட்டன் இளைஞனின் மரணத்தில் சந்தேகம்…!!
Next post மெக்சிகோவில் 3 ரகசிய போலீசார் சுட்டுக் கொலை: போதைப்பொருள் வியாபாரிகள் வெறிச்செயல்…!!