மெக்சிகோவில் 3 ரகசிய போலீசார் சுட்டுக் கொலை: போதைப்பொருள் வியாபாரிகள் வெறிச்செயல்…!!
Read Time:1 Minute, 15 Second
உலகின் போதைப்பொருள் சாம்ராஜ்ஜியமாக விளங்கிவரும் மெக்சிகோவில் கோஷ்டிகளுக்குள் ஏற்படும் தொழில் முறை மோதல்களில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 850-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இங்கு நடைபெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் புலன் விசாரணை செய்யும் பொறுப்பு ரகசிய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்குள்ள குர்ரேரோ மாநிலத்தில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூன்று போலீசார் சாதாரண உடையில் சிலாப்பா நகரில் உள்ள கடைவீதி வழியாக நேற்று சென்றனர்.
அப்போது, அவர்களை வழிமறித்த அடையாளம் தெரியாத சிலர் திடீரென்று துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் அவர்கள் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Average Rating