பனப்பாக்கம் அருகே சிறுமியின் கழுத்தை அறுத்து கற்பழிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைப்பு…!!
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவரின் மகள் மீனா (வயது 11 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று விடுமுறை என்பதால், சிறுமி மீனா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் அசோக்குமார் (வயது30) என்ற வாலிபர் அங்கு வந்தார். மீனாவை நோட்டமிட்டார்.
விளையாடிக் கொண்டிருந்த மீனா, சிறிது நேரம் கழித்து அங்குள்ள விவசாய நிலத்திற்கு சென்றார். அவரை மறைமுகமாக அசோக்குமாரும் பின்தொடர்ந்தார்.
அப்போது அங்கு யாரும் இல்லாததை அறிந்த அசோக்குமார், சிறுமியை வாயை பொத்தி மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்றார். வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அசோக்குமாரிடம் இருந்து தப்பிக்க சிறுமி போராடினார். இதனால் ஆத்திரமடைந்த அவர், சிறுமியின் கழுத்தை கத்தியால் அறுத்தார். கழுத்து அறுபட்டதில் ரத்தம் பீறிட்டது. சிறுமி மயக்கமடைந்தார். இந்த கொடூர செயலை பார்த்து, அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ந்தனர்.
அசோக்குமாரை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். சிறுமியை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அசோக்குமார் நெமிலி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating