ஈரோடு ஆயில் மில்லில் விபத்து: 2 பேர் பலி…!!
ஈரோடு நாராயண வலசு திருமால் நகரில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான ஆயில் மில் உள்ளது.
இந்த மில்லில் பல நிறுவனங்களின் கழிவு ஆயில்களை வாங்கி அதை மறு சுழற்சி செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன் இந்த மில்லில் திடீர் விபத்து ஏற்பட்டது. கொதிக்கும் ஆயில் திடீரென சிதறி கொப்பளித்தது.
அப்போது அருகே வேலை செய்து கொண்டிருந்த ஈஸ்வர மூர்த்தி (வயது 22), ரவி (24) ஆகிய 2 தொழிலாளர்களும் உடல் வெந்து கருகினர். உடனடி யாக அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதில் தட்சிணாமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரவி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவரும் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் 2 தொழிலாளர்களும் உயிர் இழந்தனர்.
பலியான ஈஸ்வர மூர்த்தி ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்தவர், மற்றொருவரான ரவி அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர். இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து ஆயில் மில் உரிமையாளர் முருசனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating