பரமக்குடி அருகே வேளாண்மைத்துறை பெண் அதிகாரி தற்கொலை முயற்சி…!!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒட்டப்பாலம் அருகே வேளாண்மைத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு விதை விற்பனை பிரிவு கண்காணிப்பாளராக இருப்பவர் ஜூலி கிறிஸ்டி (வயது44).
கடந்த 2015-ம் ஆண்டு விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்த பணம் தொடர்பாக ஜூலி கிறிஸ்டிக்கும், ராமநாதபுரத்தில் பணியாற்றிவரும் வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணையாவுக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது
இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜூலி கிறிஸ்டி, பரமக்குடி சேதுபதி நகரில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை, கணவர் தாமஸ்ராஜ் காப்பாற்றி பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலைக்கு முயன்ற பெண் அதிகாரி ஜூலி கிறிஸ்டியின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகும்.
Average Rating