யாழ்.மத்திய கல்லூரி மாணவன் பலியாகிய உண்மை சாட்சி வெளியானது…!! வீடியோ
யாழ் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த விபத்தில் மாணவனொருவன் உயிரிழந்திருந்தார். பட்டா ரக வாகனமொன்றே மாணவரை மோதித்தள்ளியதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் அந்த செய்தி தவறானதென தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த ஹயஸ் வாகனமே காரணமென கூறப்படுகிறது.
துவிச்சக்கர வண்டி பின்னால் வந்ததை கவனிக்காமல் கதவினை திறந்துள்ளார். திறக்கப்பட்ட கதவில் மோதுண்டே வீதியில் வீழ்ந்துள்ளார். இதன்போதே பின்னால் வந்த பட்டா ரக வாகனம் மாணவன் மீது மோதி விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார் அப்பாவி மாணவன் நிரோஜன்.
யாழ். காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், தாவடி காளி கோவிலடியைச் சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது 17) என்ற மாணவனே உயிரிழந்தார்.
சைக்கிளில் பாடசாலைக்குச் சென்ற மாணவனை வேகமாக வந்த பட்டா வாகனம் மோதித்தள்ளியது. இதில் மாணவன் பலத்த காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் குறிப்பிடத்தக்கது
Average Rating